சவூதியில் கோர விபத்து! இங்கிலாந்தைச் சேர்ந்த 4 உம்ரா யாத்திரீகர்கள் உயிரிழப்பு. பலர் காயம்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 17 பயணிகளுடன்பேருந்து ஒன்று சவூதி அரேபியாவில் மக்காவுக்குசென்ற போது ஏற்பட்ட விபத்தில் உம்ராயாத்திரீகர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

சவூதியின் மேற்கு நகரான அல் கலாஸ்பகுதியருகே சென்ற பேருந்து எரிபொருள் ஏற்றிவந்த லாரி ஒன்றின் மீது மோதியே இப் பேரூந்துவிபத்தில் சிக்கியது. இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 4 பேர்பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். இதனைஇங்கிலாந்துக்கான சவூதி தூதர் உறுதிப்படுத்திஉள்ளார்.

காயமடைந்தோர் மக்காவில் உள்ளமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுஉள்ளனர். வபாத்தானோரில் தாய் மற்றும் மகனும்அடங்குவர். மற்ற இருவரும் வயது முதிர்ந்தவர்கள்என தெரிய வந்துள்ளது. அவர்கள் பற்றிய மேலதிகவிபரம் இல்லை.(MN)