ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பியுள்ளார்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார்.

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 15 ஆம் திகதி லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மருத்துவர், அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் அவரது பாரியார், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பலர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.