2018 ஐபிஎல் தொடரில் சென்னை அணி பங்கேற்குமா? வெளியான தகவல்


ஐபிஎல் தொடரில் பங்கேற்க எல்லா சிக்கல்களையும் நீக்கும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் பிசிசிஐ கூறியுள்ளதால் அந்த அணி 2018 தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015-ல் நடந்த தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.

தடைக்காலம் இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் முடிந்துவிட்டதால் அடுத்தாண்டு நடக்கும் தொடரில் பங்கேற்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்க சில சிக்கல்கள் உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

இதனால் 2018 ஐபிஎல் தொடர் துவங்கும் முன்னர் சிக்கல்களை சரி செய்யும்படி சென்னை அணி நிர்வாகத்துக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளதால், அந்த அணி 2018 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.