கடைசி நேரத்திலும் பதறாது பொறுமையாக நின்ற தோனி!

“பிராவோ அனுபவம் நிறைந்த வீரராக காணப்படுகின்ற போதிலும் அவருக்கும் சில சந்தர்ப்பங்களில் ஆலோசனை அவசியப்படுகின்றது” என சென்னை அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஹைதராபாத் அணியுடனான வெற்றியினைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.



மேலும், போட்டியின் கடைசி ஓவரை பிராவோ வீசினார் அச்சமயம் 2 பந்துகள் மாத்திரம் எஞ்சியுள்ள போது பிராவோவின் பந்து வீச்சு திட்டத்தினை சற்றே மாற்றுமாறு ஆலோசனை வழங்கினேன் என தோனி குறிப்பிட்டுள்ளதோடு, விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, ராயுடுவின் ஆட்டம் சிறப்பானதாகவும், அபாயகரமானதாகவும் உள்ளது எனச் சுட்டிக்காட்டிய அவர், ராயுடுவுக்கு அணியில் நல்ல இடத்தை ஒதுக்கிக் கொடுக்க விரும்புவதாகவும், ராயுடுவை ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே தான் பார்க்க விரும்புவதாகவும் தோனி மேலும் கூறியுள்ளார்.