சிக்ஸர் அடித்தே எதிரணியை நடுங்கச் செய்யும் இந்திய இளம் புயல்! – பறிபோகுமா தோனியின் இடம்?


இந்திய அணியின் நட்சத்திர வீரரரும் முன்னாள் தலைவருமான தோனியின் இடத்தினை ஹர்திக் பாண்டியா பிடித்தவிடும் வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா அண்மையில் மோதிக்கொண்ட தொடர் குறித்து நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ஹர்த்திக் பாண்டியா இந்திய அணிக்கு கிடைத்தது மிகப்பெரிய பலம் எனச் சுட்டிக்காட்டிய கங்குலி அவுஸ்ரேலியாவிற்கு எதிரான தொடரில் ஒரு சில விடயங்களை தவிர இந்திய அணியே சிறப்பான ஆதிக்கத்தைச் செய்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாண்டியா அடிக்கும் சிக்ஸர்கள் எதிரணியை நடுங்கச் செய்கின்றது. இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தினை அவர் தொடர்ந்தால் நிச்சயமாக தோனியின் இடத்தினையே பிடித்து விடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாண்டியா சிக்ஸர் அடிக்கும் முறையானது மேற்கிந்திய வீரர்களை கண்முன்நிறுத்துவதாக பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மேலும், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனி குறித்து இருவேறுபட்ட கருத்துகளையும் கிரிக்கெட் ரசிகர்களும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களும் அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments